சூலூர் விமானப்படை தளத்தில் தீவிர சோதனை : தமிழக கமாண்டோ படை வீரர்கள் அதிரடி
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, சூலூர் விமானப்படை தளத்தில் கமாண்டோ படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, சூலூர் விமானப்படை தளத்தில் கமாண்டோ படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கமாண்டோ படைவீரர்கள், நக்சல் தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையும் நடைபெற்றது. சூலூரில் அமைந்துள்ள விமானப்படை தளத்திலும், தமிழக கமாண்டோ படை மோப்ப நாய் உதவியுடன் விமானப்படைத்தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
Next Story