வேதாரண்யம் சம்பவம் - ராமதாஸ் கண்டனம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வேதாரண்யம் சம்பவம் - ராமதாஸ் கண்டனம்
x
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில்  பதிவிட்டுள்ள அவர், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவர் அம்பேத்கர் என்றும், அவரது உருவச்சிலை சேதப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த போக்கு தடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்