ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி - இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி - இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் பெரியாழ்வார் மற்றும் பெரியபெருமாள் நவனீத கிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் சப்பரமானது 4 ரதவீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. அப்போது இளைஞர்கள் உறியடித்து அசத்தியதுடன், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த வழுக்கு மரத்தில் ஏறி சாகசம் புரிந்தனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்