பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
x
சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு எதிரான அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, அந்த கடையை மூட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி, கடை மூடப்பட்டதை அறிந்த கிராம மக்கள், மதுபான கடையில் கண்ணீர்  அஞ்சலி போஸ்டர் ஓட்டி,  பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தங்களுடைய மூன்று ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி தொரிவித்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்