மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு பணியின்போது தீவிபத்து - 3 பேர் காயம்

மின் வாரிய அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் உதவி பொறியாளர் உள்பட 3 பேர் தீக்காயம் அடைந்தனர்.
மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு பணியின்போது தீவிபத்து - 3 பேர் காயம்
x
சென்னை வேப்பேரியில் உள்ள மின் வாரிய  அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் உதவி பொறியாளர் உள்பட 3 பேர் தீக்காயம் அடைந்தனர். அங்குள்ள மின்பகிர்மான பெட்டியில் இன்று காலை பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.  இந்த பணியில் உதவி பொறியாளர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் லாரன்ஸ், பரணி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின் பகிர்மானம் செய்யக்கூடிய பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்ததில் உதவி பொறியாளர் சுரேஷ் உட்பட 3 பேரும் தீக்காயம் அடைந்தனர்.அவர்களை சக ஊழியர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கு பற்றி எரிந்த தீயை, தீயணைப்புத்துறை வீரர்கள், போராடி அணைத்தனர். தீவிபத்து காரணமாக வேப்பெரி, பெரியமேடு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்