கூடுதல் வகுப்பறை கட்ட பள்ளிக்கு உதவிய ஆசிரியர்கள் - மாணவர்களின் பெற்றோர் பாராட்டு

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட ஆசிரியை ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
கூடுதல் வகுப்பறை கட்ட பள்ளிக்கு உதவிய ஆசிரியர்கள் - மாணவர்களின் பெற்றோர் பாராட்டு
x
கோவை, சரவணம்பட்டியில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது மாணவர்கள் இருக்கையில் சிரமப்பட்டு அமர்வதை கணித ஆசிரியர் சொர்ணா தேவி கண்டுள்ளார். இடவசதி இருந்தும் குறைவான வகுப்பறைகள் இருப்பதை உணர்ந்த அவர் , வகுப்பறை கட்ட ஒரு லட்சம் ரூபாயை தலைமையாசிரியரிடம் வழங்கியுள்ளார். இதனிடையே மற்றொரு ஆசிரியை விஜயா தமது கணவர் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக பெற்று தந்துள்ளார். பள்ளியின் மீது பெரிதும் அக்கறை கொண்ட ஆசிரியர்களை தலைமையாசிரியர், மாணவர்களின் பெற்றோர் பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்