கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு
x
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. கேரளாவின் வயநாடு பகுதியிலும் கனமழை கொட்டுகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ் ஆணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இரவு  ஒரு லட்சம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து ஒரு ல்ட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் ஆர்ப்பரிப்புடன் வெள்ளம் காவிரியில் பாய்ந்தோடி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்