தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விருது நகருக்குச் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி கூட்டு குடிநீர்  திட்ட பிரதான குழாயில் உடைப்பு
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சத்தியமூர்த்தி பஜார் அகமுடையார் மஹால் பேருந்து நிறுத்தம் அருகே, தாமிரபரணி கூட்டு குடிநீர்  திட்டத்தின் மூலம் விருது நகருக்குச் செல்லும் பிரதான குழாயில்  உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதான குழாயை சீரமைத்து நீர் வீணாவதை தடுக்குமாறு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் ​கோரிக்கை விடுத்துள்ளனர். சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுவதால், 20 ரூபாய் வரை கொடுத்து மக்கள் ஒருகுடம் தண்ணீர் வாங்கி வரும் நிலையில், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்