ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
x
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு படி, பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சமூகநலத்துறை செயலாளராக இருந்த மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி,  சமூக நலத்துறை செயலாளராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் கண்ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அருங்காட்சியக இயக்குநராக இருந்த கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்