அத்திவரதர் உற்சவம் - தெலங்கானா ஆளுநர் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த 25 நாட்களாக நடைபெற்று வருகிறது.
அத்திவரதர் உற்சவம் - தெலங்கானா ஆளுநர் தரிசனம்
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் , வசந்த மண்டபத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த 25 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநர் நரசிம்மன் அத்திவரதரை தரிசிக்க வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அத்திவரதரை தரிசித்த போது அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு , தீபாராதனை காட்டப்பட்டது.

அத்திவரதர் கோயிலில் அமைச்சர் தங்கமணி தரிசனம் :



காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலில் அமைச்சர் தங்கமணி, பாஜக தேசியச் செயலர் எச். ராஜா உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். மனைவி, பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்துடன் வந்திருந்த அமைச்சர் தங்கமணி, சிறப்புத் தரிசனம் செய்தார். கோயில் அர்ச்சகர்கள், அவருக்கு மாலையிட்டு வரவேற்றனர்.

பாஜக தேசியச் செயலர் எச். ராஜா வழிபாடு



பாஜக தேசியச் செயலர் எச். ராஜாவும் தரிசனம் செய்தார். இதனிடையே,  விஐபி-களின் வருகை அதிகரிப்பால், பொதுமக்கள் தரிசனம் பாதிக்கப்படுவதாகவும், போலீசாரின் கெடுபிடி அதிகரித்திருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்