கார்கில் போர் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் - திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

இந்தியாவில் தேசப்பற்று என்ற தலைப்பில் கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கார்கில் போர் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் - திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
x
சென்னை கலைவாணர் அரங்கில், இந்தியாவில் தேசப்பற்று என்ற தலைப்பில் கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் சுகாதார துறை அமைச்சர் H.V. ஹன்டே, அர்ஜுன் சம்பத், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற, விடுதலைப் போராட்ட வீரர் தியாகி பகத்சிங் குடும்பத்தினருக்கு, மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பா.ஜ.க. அறுதி, பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே பல சட்டங்களை நிறைவேற்றுவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்