புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை தயார் - திமுக தலைவர் ஸ்டாலினிடம் நாளை ஒப்படைப்பு

புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அந்த அறிக்கை வழங்கப்பட உள்ளது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை தயார் - திமுக தலைவர் ஸ்டாலினிடம் நாளை ஒப்படைப்பு
x
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, 10 பேர் கொண்ட குழுவை, கடந்த 14 ஆம் தேதி திமுக தலைமை அமைத்தது . இக்குழுவில், பொன்முடி , தங்கம் தென்னரசு , பிரின்ஸ் கஜேந்திரபாபு , முனைவர் ராஜேந்திரன் , சுந்தரவள்ளி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.இக்குழுவினர், ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அறிக்கையை தயார் செய்துள்ள நிலையில், அதனை, நாளை காலை, ஸ்டாலினிடம் அளிக்க உள்ளனர். பின்னர் இந்த அறிக்கை,  திமுக தலைமை தரப்பில் இருந்து மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்