இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது - அமைச்சர் செங்கோட்டையன்

எந்த காரணத்தை கொண்டும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது என உறுதியளிப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
x
எந்த காரணத்தை கொண்டும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது என உறுதியளிப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். வேலூரில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு அங்கு பிரசாரம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைவான மாணவர் எண்ணிக்கை காட்டி, எந்தப் பள்ளியும் மூடப்படாது என்றார். மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கும் திட்டம், ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்றும் எனவே, திட்டத்தை நிறுத்தப்படவே மாட்டாது என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில், இலவச மிதிவண்டி வழங்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்