ரூ.10 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா, சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் நெடுஞ்சாலையில் கொல்கத்தா வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரிய மூட்டையுடன் வந்த ஆட்டோ நிற்காமல் செல்லவே, அதனை மடக்கி பிடித்த போலீசார் மூட்டையில் கஞ்சா இருப்பதை கண்டுபிடிபிடித்தனர். இதையடுத்து, ஆட்டோவில் வந்த தேனியைச் சேர்ந்த கோட்டைச்சாமி மற்றும் சென்னையை சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story