துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனம், பழைய தொழிலாளர்களை பணிக்கு எடுக்காமல், புதிய தொழிலாளர்களை நியமித்து கடந்த 3ஆம் தேதி பணிக்கு அனுப்பியது. இதனை கண்டித்து மத்திய பாதுகாப்பு துறை ஒப்பந்த தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில் இன்று பூலாங்குடியில் கஞ்சி ஊற்றும் போராட்டம் நடத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
Next Story