விநியோகஸ்தர்களிடம் 1.5 கோடி மோசடி - ஜியோ நிறுவன கிளை மேலாளர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் சாலையில் ஜியோ செல்போன் நிறுவனம் இயங்கி வருகிறது.
விநியோகஸ்தர்களிடம் 1.5 கோடி மோசடி - ஜியோ நிறுவன கிளை மேலாளர் கைது
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் சாலையில்  ஜியோ செல்போன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக கிருஷ்ணகிரியை சேர்ந்த சுதாகர் பணியாற்றி வருகிறார். இவர், ஹெல்மட் சலுகை உள்ளதாக கூறி, அனைத்து விநியோஸ்தர்களிடம் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்று எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிந்த நிலையில், பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள்  மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜியோ நிறுவன கிளை மேலாளர் சுதாகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்