மேட்டூர் அருகே 3 ஜே.சி.பி. இயந்திரங்கள் தீப்பிடித்து சேதம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

மேட்டூர் அருகே 3 ஜேசிபி இயந்திரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதடைந்தன.
மேட்டூர் அருகே 3 ஜே.சி.பி. இயந்திரங்கள் தீப்பிடித்து சேதம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
x
மேட்டூர் அருகே 3 ஜேசிபி இயந்திரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதடைந்தன .அவை மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியான கொளத்தூர்  சென்றாய பெருமாள் கோவில் அருகே வண்டல் மண் தோண்டுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை அந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.விவசாயிகள் போர்வையில் செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் வண்டல் மண்ணை அள்ளி வருவதாக புகார் எழுந்துள்ள நிவையில் ஜேசிபி வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்