முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து

முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தமது கன்னிப்பேச்சின் போது வாழ்த்து தெரிவித்தார்.
முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து
x
இன்று பிற்பகல், நாடாளுமன்ற மக்களவையில் தென்சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், முதன்முறையாக பேசினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், நிதியமைச்சராக தனிப்பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.அவர், தமிழக மண்ணின் மகள் என்றும், தமது பேச்சில் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், இந்தியா தொழிலாளர்களை அடிப்படையாக வைத்து, வளரும் நாடு என கூறினார். ஆனால், தற்போது வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அரசு, கார்ப்பரேட்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு தமது எதிர்ப்பை பதிவு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்