மாணவர் ரம்பு படுகொலை - நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

மதுரை மேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட மாணவர் ரம்புவின் படுகொலைக்கு நீதி கேட்டு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
மதுரை மேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட மாணவர் ரம்புவின் படுகொலைக்கு நீதி கேட்டு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ரம்புவை வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. சுபாஷ், தங்கையா, திவாகர் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்