என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 14 பேர் - வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேர் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 14 பேர் - வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
x
தீவிரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி திரட்டி வருவதாக வந்த புகாரை அடுத்து தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தமிழகத்தில் நாகை, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் நாகையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.அவர்கள் சிறப்பு  விமானத்தில் டெல்லியில்  இருந்து சென்னை அழைத்துப்பட்டனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வரும் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்