பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு

பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டம் அமைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
பெருந்தலைவர் காமராஜர்  மணி மண்டம் அமைப்பு
x
விருதுநகர் நுழைவாயிலில்  கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை தலைமைசெயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  மதுரை திருநெல்வேலி 
தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிகுடியில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் சரத்குமாரால் காமராஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஒன்பதேகால் மணியளவில் நடைபெறும் காமராஜர் மணி மண்டப  திறப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 
மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்