4 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
4 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் மக்கள்
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கிடைக்காமல், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குமாரக்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலவும் மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறும் அப்பகுதி மக்கள், அவசர தேவைகளுக்கு அங்குள்ள குளத்து நீரை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஜெனரேட்டர் மூலம் மோட்டாரை இயக்கி, பொதுமக்களுக்கு குடிநீரை வினியோகிக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்