காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி - சரத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் தமது சொந்த செலவில் கட்டிவரும் காமராஜர் மணி மண்டப பணிகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி வருகிறார். இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 15-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்நிலையில் இதற்கான ஏற்பாட்டை சரத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமது பிறந்தநாளை இந்த மணிமண்டப பகுதியில் கொண்டாட சரத்குமார் திட்டமிட்டுள்ளார்.
Next Story