சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 9 செல்போன் 7 மெமரி கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
x
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மண்ணடி மற்றும் புரசைவாக்கத்தில் முகமது புகாரி என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதே போல், நாகையில் மஞ்சகொல்லை, சிக்கல் ஆகிய இடங்களில் அசன் அலி, ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடடை பெற்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனையின் முடிவில், 9 செல்போன், 15 சிம் கார்டு, 7 மெமரி கார்டு, 3 லேப்-டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்