நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா எடுக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்

நூற்றாண்டை கண்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா எடுக்கப்படும்  - ஓ.பன்னீர் செல்வம்
x
நூற்றாண்டை கண்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்,நாவலர் நெடுஞ்செழியனுக்கு தமிழக அரசு சிறப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாவலர் நெடுஞ்செழியனுக்கு தனி விழாவாக அரசு எடுக்கும் என்றும், அந்த விழாவில் நாவலரின் பெயர் வரலாற்றில் இடம் பெறும் வகையில் முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்