சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
திருமங்கலத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறி, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ஒன்றிய அலுவலகம் முன், வாயிலை மறித்து தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்த உடன் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story