ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை குறைப்பு : ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்ததால் பரபரப்பு

எழும்பூர் முதல் பல்லாவாரம் வரை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
x
கடற்கரை முதல்  தாம்பரம் செல்லக்கூடிய ரயில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30  வரை ரத்து செய்யப்பட்டது.  இதேபோல் தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்லக்கூடிய ரயில் அதிகாலை முதல் 8.45 வரை இயங்காது என  ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து கோடம்பாக்கம் வரை 20 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் , தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 40 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான  பயணிகள்  கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் குவிந்ததால் அங்கு கூட்டம் அலை மோதியது.  ரயிலில்  இடம் கிடைக்காமல் பயணிகள்  படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். சுவர் ஏறி குதித்தும், தண்டவாளத்தில் இறங்கிய படியும் பயணிகள் அங்கு இங்குமாக சென்றதால் கோடம்பாக்கம் ரயில் நிலையம் பரப்பாக காணப்பட்டது.  இந்நிலையில், மதியம் 2.30 மணிக்கு மேல் ரயில் சேவை சீரானது.

Next Story

மேலும் செய்திகள்