நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்று வருகிறது.
x
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம்  வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் உள்ளிட் 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது, தேர் 4 மாட வீதிகளையும் வலம் வர பக்தர்கள் நம்ச்சிவாய என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னீட்டு பெண்கள் நான்கு மாட வீதிகளையும் மாகோலமிட்டு  நடனம் ஆடியபடி வந்தனர்.


தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள பூஜைகள்  நடைபெறும். இதனைத்தொடர்ந்து நாளை காலை முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 2 மணியளவில் ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெறும். தேர் திருவிழாவை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்