படித்த பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை ராயபுரத்தில் தான் படித்த பள்ளியில் அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்
சென்னை ராயபுரத்தில் தான் படித்த பள்ளியில் அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். ராயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி, கணினி தொடர்பான கேள்விகளை எழுப்பினார். சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் அவர் பரிசு வழங்கினார். இதனை தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
Next Story