செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயில் கருகிய வாகனங்கள்

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரக கார் பைக் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயில் கருகிய வாகனங்கள்
x
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரக கார், பைக் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் பின்புறம் நிறுத்ததப்பட்டிருந்தது. அங்கு, திடீரென பற்றிய தீ, மளமளவென பரவி வாகனங்களில் பிடித்தது. தகவலறிந்து வந்த செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் பகுதி தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது குறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்