சேலம் அருகே நம்பி வந்த பெண்ணை காதலன் கழுத்தறுத்து தண்டவாளத்தில் உடலை வீசிய கொடூரம்

மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு நம்பி வந்த பெண்ணை காதலன் கழுத்தறுத்து தண்டவாளத்தில் வீசிய கொடூரச் சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
சேலம் அருகே நம்பி வந்த பெண்ணை காதலன் கழுத்தறுத்து தண்டவாளத்தில் உடலை வீசிய கொடூரம்
x
சேலம் அருகே கொண்டலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர், அப்பகுதியில் உள்ள ஒருவருடன் திருமணமாகி மூன்று குழந்தைக்கு தாயானார்.மகிழ்ச்சியான வாழ்க்கையில் 3 குழந்தைகளுக்கு தாயான கட்டட வேலைக்கு செல்லும் முனியம்மாளுக்கு, அங்கு, செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பழக்கம் காதலாக, கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு அருகில் உள்ள புத்தூரைச் சேர்ந்த திருமணம் ஆகாத செந்திலுடன் வந்துவிட்டார்.இருவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வசித்து வந்தனர்.திருமண உறவை வென்ற முறையற்ற காதல் வாழ்க்கையிலும் அடிக்கடி கசப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், முனியம்மாளின் உடல் கொண்டலாம்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியது அம்பலமானது.முனியம்மாளின் உடலைக் கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டிலேயே வைத்து காதலன் செந்தில் கழுத்தை அறுத்துக் கொன்றதும், கொலையை மறைக்க தண்டவாளத்தில் வீசியதும் தெரியவந்துள்ளது. வீட்டில் சிதறிக்கிடந்த ரத்தம், செந்திலின் வெறித்தனமாக தாக்குதலை வெளிப்படுத்தியுள்ளது.கொலையான மகளின் உடலை பார்த்து முனியம்மாளின் தாய் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.திருமணமாகி 3 குழந்தைக்கு தாயான முனியம்மாளுக்கு 45 வயது என்பதும், செந்திலுக்கு 35 வயது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். கொலையில் முடிந்த பொருந்தாத இந்த காதல், வேலிதாண்ட நினைக்கும் பலருக்கும் ஓர் பாடம்....

Next Story

மேலும் செய்திகள்