கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
சாலை விபத்தில் உறவினர் பலியான சோகத்தால் விபரீத முடிவு
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஆரப்பாளையத்தை சேர்ந்த மீனாட்சி படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் உறவினர் உயிரிழந்த சோகத்தில் இருந்த அவர், மனவருத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story