விஜயபுரி அம்மன் கோயில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேரோட்டம்
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலில், 25 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பராமரிப்பின்றி பழுதடைந்த இந்த தேர், பத்து லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, முதல் முறையாக இந்தாண்டு தேரோட்டம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Next Story