குஷ்பு புகார் - வாகன எண் இன்றி 10 நாட்களாக நின்ற சரக்கு லாரி பறிமுதல்...

வாகன எண் இன்றி 10 நாட்களாக தம் வீடு அருகே நின்ற சரக்கு லாரி குறித்து நடிகை குஷ்பு அளித்த தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
குஷ்பு புகார் - வாகன எண் இன்றி 10 நாட்களாக நின்ற சரக்கு லாரி பறிமுதல்...
x
தம் வீடு அருகே நம்பர் பிளேட் இல்லாத, கன்டெய்னர் லாரி ஒன்று நிற்பது குறித்து நடிகை குஷ்பு அளித்த தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.பட்டினப்பாக்கம் அருகே வசிக்கும் நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமாக குஷ்புவின் வீட்டருகே கடந்த 10 நாட்களாக லாரி ஒன்று நின்றுள்ளது. நம்பர் பிளேட் இன்றி, சந்தேகத்துக்கு இடமாக நின்ற அந்த லாரி குறித்து, தமது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பதிவிட்டார். 
சென்னை போலீஸ் கவனத்தில் எடுக்குமாறு அவர், பதிவிட்டதை தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து கூறிய போலீசார், ஜி.சி.டி.பி. செயலி மூலம் புகாரளிக்குமாறு குஷ்புவுக்கு வேண்டுகோள் விடுத்தனர். குஷ்புவின் இந்த நடவடிக்கையால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்