ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிய நபர்...

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிய நபர்...
x
சென்னையில் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சேமிப்பு உண்டியல் ஒன்று டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதனை ஓட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர் திருடி தனது பையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். உண்டியல் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது தான் இந்த சம்பவம் தெரியவந்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உண்டியலை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்