முருகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மனவளர்ச்சி குன்றிய பீகார் இளைஞர் மீட்பு...

மனவளர்ச்சி குன்றிய அந்த இளைஞர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அவரது தாய் பரிமளா மற்றும் சகோதரர்கள் மூலம் தெரிய வந்தது.
முருகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மனவளர்ச்சி குன்றிய பீகார் இளைஞர் மீட்பு...
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில், நான்கு நாட்களுக்கு முன்பு, சந்தேகப்படும் படியாக வெளிமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, முருகமலை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு அந்த  இளைஞரிடம் வடகரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மனவளர்ச்சி குன்றிய அந்த இளைஞர், பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அவரது தாய் பரிமளா மற்றும் சகோதரர்கள் மூலம் தெரிய வந்தது. இந்நிலையில், தாய் மற்றும் சகோதரர் மனட்டு பஸ்வான் ஆகியோர் இளைஞர் காணாமல் போனது சம்பந்தமாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்து  பல இடங்களில் தேடி வந்த நிலையில்,  பெரியகுளத்தில் இருப்பது அறிந்து அவரை அழைத்து செல்ல காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் இளைஞரை ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்