முறைகேடாக பொருத்தப்பட்ட 108 மோட்டார்கள் பறிமுதல்

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முறைகேடாக பொருத்தப்பட்ட 108 மோட்டார்கள் பறிமுதல்
x
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்ட  மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில், பெரும்பாலான வீடுகளின் குடிநீர் இணைப்பில், முறைகேடாக மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது என்றார். தற்போது, பேரூராட்சி சார்பில் நடத்தப்பட்ட  சோதனையில், 108 மோட்டார்களை பறிமுதல் செய்துள்ளதாகவும்,  விதிகளை மீறும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்