சென்னையில் திடீர் மழை

சென்னையில் 6 மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
x
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. கேரளாவின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழகத்தின் கோவை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழை இல்லை. இந்நிலையில், இன்று, பிற்பகல், குரோம்பேட்டை, நங்கநல்லூர், தரமணி, பல்லாவரம், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழை பெய்ததற்கு, வெப்ப சலனமே, காரணம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

சென்னையில் எந்தெந்த  பகுதிகளில் மழை ?

சென்னையில் நாளையும் மழை பெய்யுமா? - வானிலை ஆர்வலர் செல்வகுமார்
சென்னையில் வருகிற 26 ஆம் தேதி வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும் என, வானிலை ஆர்வலர் செல்வக்குமார் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்