காய்கறி மகத்துவ மையத்தில் இஸ்ரேல் தூதர் ஆய்வு

இந்தியா - இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் இயங்கும் காய்கறி மகத்துவ மையத்தில் இஸ்ரேல் தூதர் ஆய்வு
x
திண்டுக்கல் அருகே  இந்தியா - இஸ்ரேல்  தொழில்நுட்பத்தில் இயங்கும் காய்கறி மகத்துவ மையத்தை இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரோன்மால்கா ஆய்வு செய்தார்.  ரெட்டியார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் இந்த மையத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் காய்கறி மகசூல் அதிகரிக்கும் முறை உள்ளிட்டவை  குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்த  இஸ்ரேல் தூதர் ரோன்மால்கா, பசுமை குடில்களில் பயிரிடப்பட்டுள்ள நாற்றுகளை பார்வையிட்டார். அப்போது தமிழக முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் உடன் சென்றனர். இதனை தொடர்ந்து காய்கறி சாகுபடி குறித்த சர்வதேச கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்