மேலூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் காரும், மினி வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.அப்போது அந்த வழியாக சென்ற மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் அதிமுகவினர் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story