"தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்" - தினகரன்

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். ஒசூர் அருகே உள்ள சுண்டகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து தொண்டர்கள் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் மாபெரும் தண்ணீர் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் பஞ்சத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார். 
==


Next Story

மேலும் செய்திகள்