தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை காட்டில் தீ விபத்து
சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை காட்டு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது
சென்னை, தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை காட்டு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கோடையின் தாக்கத்தால் மரங்கள் பட்டுபோய் இருந்ததாலும் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த யூகலிப்டஸ் மரங்கள் எரிந்து சேதமானதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story