பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடைபெற்றது.
பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில்  திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடைபெற்றது. திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த யாகத்தில் கலந்துகொள்வதன் மூலம்  தோஷங்களும் , பரம்பரை பழி பாவங்களும் விலகி உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திருமணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த யாகத்தில் பங்கேற்று விரைவில் திருமணம் நடைபெற வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்