வைகை புஷ்கர விழா : ரத யாத்திரையை துவக்கி வைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்...

வைகை புஷ்கர விழாவை முன்னிட்டு வைகை அம்மன் ரத யாத்திரையை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்.
வைகை புஷ்கர விழா : ரத யாத்திரையை துவக்கி வைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்...
x
மதுரையில் நடைபெற உள்ள வைகை புஷ்கர விழாவை முன்னிட்டு வைகை அம்மன் ரத யாத்திரையை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார். மதுரையில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரை வைகை புஷ்கர விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக மதுரை நோக்கி செல்லும் ரத யாத்திரை புறப்பட்டது. இதனை திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வைகை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து துவக்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்