அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
x
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அணு உலையின் வால்வு ஒன்றில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த நான்காம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. இந்நிலையில் வால்வில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு நேற்று மாலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது 290 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிபடியாக மின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டு முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்