மருத்துவர் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு, மருத்துவர் இல்லாததால், செவிலியர் மருத்துவம் பார்த்ததில் தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பி தோப்பை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி அகிலா,  பிரசவத்திற்காக திருக்குறுங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாததால் நர்ஸ் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அகிலாவுக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் தாயும் பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருக்குறுங்குடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்