"நாடாளுமன்ற தேர்தல் வெற்றியில் மகிழ்ச்சி இல்லை" - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழுப்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் நடைபெற்றது.
x
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழுப்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய முஸ்லீம் லிக் கட்சியின் ஜவஹாருல்லா மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, உணவு அருந்தி நோன்பு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், நாடாளளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், தான் வெற்றி பெற்றதில் துளி அளவும் மகிழ்ச்சி இல்லை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்