மாடு மீது மோதிய மினி பேருந்து - 5 பெண்கள் உள்பட 11 பேர் காயம்

மதுராந்தகம் அருகே மாடு குறுக்கே வந்த‌தால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மாடு மீது மோதிய மினி பேருந்து - 5 பெண்கள் உள்பட 11 பேர் காயம்
x
மதுராந்தகம் அருகே மாடு குறுக்கே வந்த‌தால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே கருங்குழி  தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடையூரில் இருந்து சென்னை நோக்கி, மினி பேருந்து ஒன்று அதிவேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது, திடீரென பசுமாடு ஒன்று குறுக்கே கடந்த‌தால், நிலை தடுமாறிய பேருந்து, மாடு மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 6 ஆண்கள் 5 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். 

முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி அருகேயுள்ள காவேரிப்பட்டினத்தில் முட்டைகள் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. இதில், வேனில் இருந்த முட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறி விழுந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முட்டை கழிவுகளை அப்பறப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்