தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38வது ஆண்டு நினைவு நாள் : தந்தி ஊழியர்கள் மலர் தூவி மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38வது ஆண்டு நினைவு நாள் : தந்தி ஊழியர்கள் மலர் தூவி மரியாதை
x
நெல்லை

தினத்தந்தி நாளிதழின் நெல்லை கிளை அலுவலகத்தில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு ஊழியர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். 

கோவை 

கோவை தினத்தந்தி அலுவலக  ஊழியர்கள் சி.பா.ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மலர் தூவியும், மவுன அஞ்சலியும் செலுத்தினர். 

மதுரை 

மதுரை தினத்தந்தி பதிப்பு அலுவலகத்தில், சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. ஊழியர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். 

சேலம் 

தினத்தந்தி நாளிதழின் நிறுவனத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் நினைவுதினம் சேலம் தந்தி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. ஊழியர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்