பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : விசாரணையை முடிக்க பாதிக்கப்பட்டோர் கோரிக்கை...

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : விசாரணையை முடிக்க பாதிக்கப்பட்டோர் கோரிக்கை...
x
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம், முதலீட்டாளர்களின் ஆயிரத்து 100 கோடி ரூபாயை மோசடி செய்தது.  அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாதிக்கப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கவும் பாதிக்கப்பட்டோர் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்